Tuesday, 22 February 2022

மும்மொழிச் சிலேடை

 #மும்மொழிச்_சிலேடை 

தமிழிலக்கணத்தில் ஒருவகை. இருபொருள்பட பேசுவதைத்தான் -எழுதுவதைத்தான் சிலேடை அணி என யாப்பிலக்கணத்தில் குறிப்பிடுவர். அதை #இரட்டுறமொழிதல் என்பர். அதேபோல, #மும்மொழிச்_சிலேடை  என்பது 3 பொருள்கள்பட யாப்பது.

அதற்கு எ,கா: 

"தாமரையில் சேர்தமிழ கம்" என முடியும் ஒரு #மும்மொழிச்_சிலேடை  வெண்பா. முழுச்செய்யுள் நினைவுக்கு வரவில்லை(மன்னிக்க)

இதிலே,#தாமரையில் என்பது #மும்மொழிச்_சிலேடை .

தாமரை என மலரைக் குறிப்பது; தா+மரை எனும்போது தாவும் மானைக் குறிப்பது; தாம்+அரை எனும்போது

தமது இடுப்பில் என குறிப்பது.

என்னே என் தமிழின் சொல் விளையாட்டு!! யப்பா..!!

ஆக, இம் #மும்மொழிச்_சிலேடை யை அடியேனும் கையாண்டு பார்த்தால் என தோன்றியது. வெண்பாவில் யாப்பது எனக்குச் சிரமம்தான்.

எனவே, இப்படி படைத்துள்ளேன்.

இரசிக்க முடியாவிடினும் சகித்துக் கொள்க.

*அழகியாம் 

அப்பாவை தனக்கு

அடிபிறழாது

அரிய வெண்பாவை

யாத்துத் கந்தேன்

காதலினால்.

★அப்பாவை படித்த

அப்பாவை

அழைத்து வந்தாள்-அவளின்

அப்பாவை.

  அன்புடன்,

  கம்கோ சித்தர்

ஆண்களின் தமிழ்ப் பருவப் பெயர்கள்

சித்திரை 2ஆம் நாளிலேயே இந்தளவுக்கு 'வேக்காடு' வே(ர்)த்துப் பூத்து பாடாப்படுத்துதே... அப்படின்னா அக்கினி நட்சத்திரத்துல எ...