#மும்மொழிச்_சிலேடை
தமிழிலக்கணத்தில் ஒருவகை. இருபொருள்பட பேசுவதைத்தான் -எழுதுவதைத்தான் சிலேடை அணி என யாப்பிலக்கணத்தில் குறிப்பிடுவர். அதை #இரட்டுறமொழிதல் என்பர். அதேபோல, #மும்மொழிச்_சிலேடை என்பது 3 பொருள்கள்பட யாப்பது.
அதற்கு எ,கா:
"தாமரையில் சேர்தமிழ கம்" என முடியும் ஒரு #மும்மொழிச்_சிலேடை வெண்பா. முழுச்செய்யுள் நினைவுக்கு வரவில்லை(மன்னிக்க)
இதிலே,#தாமரையில் என்பது #மும்மொழிச்_சிலேடை .
தாமரை என மலரைக் குறிப்பது; தா+மரை எனும்போது தாவும் மானைக் குறிப்பது; தாம்+அரை எனும்போது
தமது இடுப்பில் என குறிப்பது.
என்னே என் தமிழின் சொல் விளையாட்டு!! யப்பா..!!
ஆக, இம் #மும்மொழிச்_சிலேடை யை அடியேனும் கையாண்டு பார்த்தால் என தோன்றியது. வெண்பாவில் யாப்பது எனக்குச் சிரமம்தான்.
எனவே, இப்படி படைத்துள்ளேன்.
இரசிக்க முடியாவிடினும் சகித்துக் கொள்க.
*அழகியாம்
அப்பாவை தனக்கு
அடிபிறழாது
அரிய வெண்பாவை
யாத்துத் கந்தேன்
காதலினால்.
★அப்பாவை படித்த
அப்பாவை
அழைத்து வந்தாள்-அவளின்
அப்பாவை.
அன்புடன்,
கம்கோ சித்தர்